Showing posts with label Tamil Verses. Show all posts
Showing posts with label Tamil Verses. Show all posts

Sunday, 13 August 2017

Kulirvikkum mazhaye!!!

Kulirntha kaatru mella varuda kaarmegam karaigirathe
Siruga siruga karainthu vanthu saaralanadhe
Mudhal thuli en mel vizha magizhchi ponguthe
Aalangatti tharayil vizha punnagai pookkudhe....
Siru siru vairangaalaai kottum mazhai thuligal...
Paranthu virinthu aadi varum vanna mayil iragugal...
Kuruvi koottam silirthu koottam koodi parakkave
Thannai nenaikkum maari kandu bhoomi sirikkave
Paarkiren punnagai uzhavar enum kadavul mugaththile....
Soodana theneer kulambi
Ponnirathil ventha milagai bhajji
Kottum mazhai kandu unbadharumaiye
Nilam ninaithu pattadaayai milirvathu swargame...

Sukumar Ra

Thursday, 14 February 2013

என் காதல் 20 (முற்றும் )

புரிந்தும் புரியாமல் இருப்பது
பெரியோரின் கூட பிறந்தது 
காதலர்களுக்கு பிடிக்காதது 
காதல் என்றுமே ஏற்காதது 

காதலுக்கு அடி பணிந்தவர்க்கு 
காதலை தவிர வேறொன்று எதற்கு 
காதலில் இனிமை இருக்கு 
காதல் இல்ல வாழ்வெதற்கு

பெரியோர்களுக்கு அவகாசம் வேண்டும்
பெரியமனதுடன் ஏற்றுகொள்ள தொடரும்
பெரிதாய் உணர நாழியாகும்
பெரிதளவில் அவர்கள் உள்ளம் குளிரும்

எதிர்ப்புகள் குறைய துவங்கின
ஏற்றுகொள்ளும் சுவடுகள் தோன்றின
ஏற்க வந்தது அரை மனதுடன்
ஏற்க வைக்க வேண்டும் முழுமனதுடன்

புரிய வைத்தல் தொடங்கியது
புரிந்து கொள்ளுதலும் கூடியது
பிள்ளைகள் மகிழ்ச்சி பெரிது
பினைப்பில்லா நம்பிக்கைகள் தோற்றது

காலம் கூடி வர
காதலுக்கு வெற்றி சேர
கல்லுள்ளங்களும் கரைந்தன
காதலுக்கு வெற்றி கொடுத்தன

எதிர்பார்க்கும் குணங்கள் இருப்பின்
ஏகத்திற்கு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி கொடுப்பின்
எக்கு தப்பை எதிர்பானேன்
ஏற்றுக்கொண்டால் போக போவதேன்

ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டார்
ஒன்றாய் வாழ வழி வகுத்தனர்
ஒன்றுக்கும் உதவா கொள்கைகள் கைவிட்டனர்
ஒரு நாள் நிர்ணயித்தனர்

பேச்சு வார்த்தைகள் துவங்கின
பேசி முடிக்கும் ஆர்வங்கள் கூடின
பேரின்பம் காதலுக்கு பேச்சுக்கள்  கொடுத்தன
பெற்றோரை காதலர்கள் பெருமை படுத்தின

நாட்கள் குறித்தனர்
நன்றாய் காதல் உள்ளங்களை குளிர வைத்தனர்
நன்றே நடக்கும் என நம்பினார்
நல்லுள்ளங்களில் ஆசீர்வாதங்களை அள்ளி தெளித்தனர்

களவும் கற்று  மற  
காதலை என்றும் மறா
கடினமாயினும் வெற்றி பெற
காலமும் வாழ்த்தும் நிறைய ------------ முற்றும் ----சுகுமார் ரா

Sunday, 10 February 2013

என் காதல் 19(தொடர்ச்சி)

காலங்கள் மாறினாலும்
காதலர்களின் ஊடங்கங்கள் மாறினாலும் 
காதலின் வெளிப்பாடு மாறினாலும் 
காதல் மாறாதது அழியாதது 

எதிர்ப்புகள் பல வரும் 
ஏகத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படும் 
எத்தனை காலம் ஆனாலும் 
என்றைக்கும் இருக்கும் காதல் 

வழக்கமான மிரட்டல்கள் 
வாழ்கை மேல் பயமுறுத்தல்கள் 
வண்டி வண்டியை சொன்னார்கள் 
வண்டுகள் போல மொய்த்தார்கள் 

விடாது எங்கள் முயற்சி 
விடமாட்டோம் எங்கள் பெயர்ச்சி 
வீறுகொண்டு எழுவோம் காதலுக்கு 
வெற்றி பெற்று வாழ்வோம் மகிழ்வோடு 

ஊடல் கூடல் பெருகியது 
ஊடங்கங்கள் உதவி கூடியது 
உள்ளிருக்கும் காதல் ஆகாயம்  தொட்டது 
உண்மை நிலை பெற்றோருக்கு புரிந்தது 

பெற்றோரின் பாசம் தேவை -அனால் 
பிற்போக்கு கருத்துக்கள் ஏற்க தேவை இல்லை
முற்போக்குடன் புரிய வைத்தோம் 
புரிந்தாலும் ஏற்க அவர் மனதில் இடம் இல்லை 

துடுக்குத்தனம் தலை தூக்கியது 
துடிப்புகள் கூடியது 
துன்பத்தை தடுக்க எண்ணம் வந்தது 
துடிதுடிக்கும் நெஞ்சங்கள் நிமிர்ந்து நின்றது 

ஆயிரம் கரங்கள் வந்தாலும் 
அழிக்க முடியாது காதலையும் 
அதனுடன் பெருகும் நேசத்தையும் 
ஆழ புரிந்தது அவர்களுக்கு அனைத்தும் 

------------------------------------------------------- தொடரும் ........... சுகுமார் ரா 


Friday, 8 February 2013

என் காதல் 18(தொடர்ச்சி )

மோதல்கள் பெருகின் காதல் பெருகும்
பெட்ட்றோரின் எதிருப்புக்கு அது பொருந்தும்
தடை சொன்னால் தடுமாறுவது அக்காலம்
தடைகளை மீறி வாழ்வதே இக்காலம்

சொல்லம்புகள் எய்தனர்
சொற்போர் புரிந்தனர்
செல்லா கரணங்கள்  சொல்லினர்
செல்லாது எங்கள் காதல் என்றனர்

துடிப்பு கூடியது
வெறி ஏறியது
வெற்றி நோக்கி சென்றது
வேரூன்றி நின்றது

காரங்கள் வினாவினோம்
கரங்களால் அனைத்து கொண்டோம்
காதலித்ததே தவறாம்
காதலுக்கு கல்லறையாம்

இலங்குருதி அடங்குமா ?
இச்சொற்கள் கேட்டு மாறுமா ?
இல்லை இக்கொற்றினை ஏற்போமா?
இல்லை நாங்கள் சரி என்று நிற்போமா ?

வேதனை பெருகிய உள்ளங்கள் சல்லாபித்தன
வெற்றி அடைவதே இலக்கென நிர்ணயித்தன
முடிவினை அறிவிக்கவும் செய்தன - அதன்
பலனாய் பல புண்களும் பெற்றன

வாழ்வின்  ஓட்டம் நிற்கவில்லை
வளரும் காதலை தடுப்பது சாத்தியமில்லை
வலுக்கட்டாய படுத்துவதில் அர்த்தமில்லை
வாழ்ந்து  முடித்தவற்கு அது புரிவதும் இல்லை

எங்கள் கதைப்புகள் பெருகின
உள்ளங்கள் மிக நெருங்கின
மின்னல்கள் கண்களில் அரும்பின-காதல்
சின்னங்கள் பற்பல கூடின

கலாம் கடந்து போக
காலனும் மரப்பானம் பாசக்கயிறு விட
கலி காலமே முடிந்தாலும்
காதலர்களின் பெட்ட்றோர் எதிர்ப்பு மாறாதாம்

------------------------------------------------------------------ தொடரும்...... சுகுமார் ரா

Monday, 21 January 2013

என் காதல் 17

வேதனையில் வாடின உள்ளங்கள்
வேர்த்து கொட்டிய நெற்றிகள்
வேரின்றி நின்ற நெஞ்சங்கள்
வேறு பட்டன இருப்பிடங்கள்

எவ்வாறு சிந்திப்போம்
எவ்வாறு சிலாகிப்போம்
என்று ஒன்று சேர்வோம்
எவ்வாறு வாழ்வோம்

கேள்விகள் பல மனதில்
கேட்டும் கிட்டவில்லை பதில்
கேட்பது நாங்கள் யாரிடதிதில்
கலப்பது என்று ஓரிடத்தில்

இருக்கும் வாய்ப்புகளை தேடினோம்
இருப்பினும் சந்தித்தோம்
இரும்பு உள்ளங்களை கரைக்க துடித்தோம்
இம்மியளவு கரைத்தோம்

காலம் கடந்து சென்றது
கல் நெஞ்சங்கள் கரைய துடங்கியது
கல்யாணம் செய்ய மட்டும் மறுத்தது
கள்ள நெஞ்சம் வெளிப்பட்டது

விடவில்லை நாங்கள்
விடாமுயற்சி வீரர்கள்
விண்ணுலகம் எதிர்த்தாலும்
வெற்றி பெற நினைப்பவர்கள்

அவளின் இருப்பிடம் மாறியது
அன்றே சந்திக்கும் வாய்ப்பு வந்தது
அக்கணமே தவிப்பு நீங்கியது
அரவணைப்புகள் துவங்கியது

நினைத்த நேரம் சந்தித்தோம்
நினைத்ததை விட காதல் பரிமாறினோம்
நினைத்ததை போல் வழ எண்ணினோம்
நிஜமான காதலை புரிய வைக்க தொடங்கினோம்

காதலின் ஆழம் புரிந்தது -அதை
கருவறுக்க கரங்கள் நீண்டது
காதலை அழிக்க அவர்கள் மனம் துடித்தது
கவலைகளில் அவர்கள் நெஞ்சங்கள் வாடியது

மீண்டும் முதலுக்கு வந்தது
மீட்டு சென்றனர் அவர்கள் மகளை
மிரட்டி பார்த்தனர்
மிரண்டு போனார்கள்

Tuesday, 18 September 2012

என் காதல்-16

அவள் குடும்பம் ஊருக்கே சென்றது
அவள் விடுதியில் தங்க நேர்ந்தது
அது எங்களுக்கு சாதகமாய் ஆனது
அவளை நினைத்த பொது காண கொடுத்து வைத்தது

மீண்டும் பனி கிடைத்தது
மீண்டும் மீண்டும் சந்திக்கும் வைப்பு பெருகியது
மீன் போல் துள்ளி குதிக்க தோன்றியது
மீதமின்றி காதலை பகிர்ந்த உணர்வித்து

மாறினால் அவள் மற்றொரு விடுதிக்கு
மணாளன் தங்கி இருக்கும் பகுதிக்கு
மாலை நேரம் சந்திப்பு
மனதில் தினமும் தித்திப்பு

அறிய வாய்ப்பிது எங்களுக்கு
ஐந்து நிமிடங்களில் சந்திக்கும் வாய்ப்பிது
அவளுக்கு பெரும் வியப்பிது
அளவற்ற சந்தோஷம் குடி கொண்டது

மாதம் ஒன்று கடந்தது - என்
மாமியாருக்கு சந்தேகம் வந்தது
மாற்றிவிட்டால் அவள் நிவாசத்தினை
மன பாரத்தில் எங்கள் மனதினை

நோண்டி துளைத்தனர் கேளிவிகளால்
நோகடித்தனர் சுடு சொற்களால்
நோக்கும் வாய்ப்பு பறிபோனதால்
நொந்த மனங்களில் புலம்பல்கள்


============================தொடரும்

என் காதல்-15

  போட்டி ஒன்று வந்தது
பிறந்த நாளுக்கு யார் முதல்  வாழ்த்துவது
பிறப்பிலே போட்டிகளை எதிர்கொள்பவன்
பிறந்த நாள் வாழ்த்தில் தோர்பானேன்!

இரவு  பதினொன்று ஐம்பது
இம்மியளவும்  பிசகாது  அவளை  அழைத்து
இசை  பாடினேன்  சிறிது
இனிமையாய் கூறினேன் வாழ்த்து

ஈன்றவர்கலிம் வாழ்த்து பெற்றாள்
ஈஞ்சம்பாக்கம் செல்லவேண்டும் என்றாள்
ஈ  போல  பறந்து வர சொன்னாள்
ஈர்த்துக்கொண்டு செல்ல எண்ணினாள்

சாய் நாதனை தரிசித்தோம் 
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம் 
சந்தோஷமாய் முதுகலை பதிவினை நிரப்பினோம்
சாரலில் நனைந்து திரிந்தோம்
 
வேதம் படம் பார்க்க தோன்றியது
வேறு எண்ணம் இன்றி அதை மதி செய்ய துடித்தது
வேகமாய் சீட்டுகள் பெற்றாகிவிட்டது
வேர்க விருவிருக்க அரங்கினில் சென்றகி விட்டது

இனிதாய் கதைத்தோம்
இன்பமுடம் என்றும் இருக்க எண்ணினோம்
இன்று போல என்றும்  அமைய வேண்டினோம்
இனிய பண்ணிசைத்து விடை கூறினோம்

==============================================தொடரும்

Monday, 17 September 2012

என் காதல்-14

உண்ண மறப்பது 
உட்ற்றர் உறவினரை பொருட்படுத்தாதது 
உலகினை துறப்பது 
உள்ளத்தால் வாழ்வது 

ஊருலகம் தவிர்த்து 
ஊஞ்சலாடி திரிந்து 
ஊசலாடினாலும் கண்டுகொள்ளது 
ஊதாப்பு போல மென்மையானது 

ஏக்கம் கொடுப்பது 
ஏங்கி தவிக்க வைப்பது 
ஏறுமுகம் கொண்டது 
ஏமாற்றம் நிறைந்தது 

ஐய்யங்களுக்கு இடம் கொடுக்காதது 
ஐய்யமின்றி சிறந்து விளங்குவது 
ஐயம் தோன்றின் உடைந்து போவது 
ஐம்புலன்களையும் ஆட்டி வைப்பது 

ஒன்று சேர வைப்பது 
ஒன்றாய்  இருக்க தூண்டுவது - இரு உள்ளங்களை 
ஒன்றென செய்வது - உலகை 
ஒன்றிணைக்க வைப்பது 

ஓடா நிலை பெற்றது - பல தூரம் 
ஓட வைப்பது - நீர் 
ஓடை போல் சிலிர்ப்பூட்டுவது 
ஓடி ஓடி உழைக்க வைப்பது 

ஔவையார் பாடியது 
ஔவையை பாட்டியக்கியது 
ஒளஷதமாய் இருப்பது 
ஒள லா என சிறகடிக்க வைப்பது 

காதலை பல கோணங்களில் பார்ப்பினும் 
கண்விழிகளில் என்றும் அவள் தோற்ற்றம் 
காலமெல்லாம் அவள் நேசம் - எனக்கு 
கிட்டவேண்டும் என்றும் அவளின் பாசம் 

வேலை தேடல் மும்மரம் 
வேண்டுதல்கள் பல்லாயிரம் 
வேலை கிடைப்பது பெருங்கஷ்டம்
வேலை கிட்டவில்லை எனின் பெரும் நஷ்டம் 
 
பல நாள் கனவு - முதுகலை 
பட்ட படிப்பு 
பல முறை யோசித்து 
பளிங்கென எடுத்தோம் முடிவு!

அவளின் பிறந்த நாள் - என் 
அன்பு இவ்வுலகில் மலர்ந்த நாள் 
அன்பளிப்பு கொடுக்க திணறிய நாள் - என் 
அரவனைப்பில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட நாள் !

======================================== தொடரும் 







என் காதல்-13



பிரச்சினைகள் எத்துனை வந்தாலும்
பிரியாது வாழ்வோம்
பிரிவென்பது காதலுக்கு இல்லை என்போம்
பகுத்தறிவு கற்பிப்போம்

அளவில்லா அன்பினை தேக்கி வைத்தேன்
அவளிடம் அத்துனையும் சேர்பித்தேன்
அளவற்ற்ற காதலை பகிர்ந்தேன்
அலைகள் ஓயாது என்பதை உணர்ந்தேன்

தினம் தினம் அவளை காண எண்ணினேன்
திரைகள் அனைத்திலும் அவள் முகம் படித்தேன் - கண்
திறந்ததும் அவளை கண்டு மகிழ்ந்தேன் - என்
திறனை கண்டு  அவளை வியப்படைய வைத்தேன்

கண்விழித்ததும் அவள் முகம்
காதுகளில் அவள் கானம்
கால்களில் மெல்லிய நடனம்
காதலில் சிறிது மயக்கம்

குழந்தையை நேசிப்பது போல நேசித்தேன்
குழைந்து குழைந்து அன்பை செலுத்தினேன்
குழையா வண்ணம் காதலை பெருக்கினேன்
குறைபாடுகளை மெல்ல குலைத்தேன்

ஆயிரம் காலத்து பயிர் இது
ஆண்டவன் கருணை அவசியமானது
ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட காதல் போன்றது
ஆதம் இவளிடம் இருந்து தொடங்கியது

அனார்கலி சலிமினால் வாகை சூடியது
அம்பிகாபதி அமராவதி மூலம் வளர்ந்தது
அணைத்து ஜீவராசிகளிடமும் இருப்பது
அன்னையின் அன்பையும் மிஞ்சியது

இன்னல்கள் பல நிறைந்தது
இனிமையான நினைவுகளை கொண்டது
இவ்வுலகினை மறக்க செய்வது
இமயத்தை விட பெரியது

ஈர்பிலே ஆரம்பிப்பது
ஈர்த்த பின்னர் விலகாதது - புவி
ஈர்ப்பினை விட பன்மடங்கு வலியது
ஈட்டி முனை போல் கூர்மையானது

எவரை கண்டும் அஞ்சாதது
எவ்வாறேனும் ஒன்று சேர துடிப்பது
என்றும் அழியாதது
எவரையும் வெல்வது

========================== தொடரும்






என் காதல்-12

கனவுலகில் வாழ்வது இனிமையானது
கனவுகள் என்றுமே தித்திப்பானது
காரிருள் சூழ்ந்தது போல் தெரிந்தது
கருவரையில் இருப்பது போல உணர்விது

நினைவுலகம் கொடுமைகள் நிறைந்தது
சந்தோசம்  மிகுந்தது
சண்டைகளுடன்  கூடியது
சச்சரவுகள் உடன் நகர்வது

வாழ்ந்தே ஆகவேண்டும்
பெற்றோரின் சம்மதம் பெற்றே ஆகவேடும்
உற்றார் உறவினரின் ஏச்சுக்கு ஆலகதிருக்கவேண்டும்
உண்மையாய்  என்றும் இருக்க வேண்டும்

மனதில் கோஷங்கள் பல
மண்டையில் ஆக்ரோஷங்கள் பல
மதியில் தோன்றுது அழ
மரணங்கள் என்னுள் சில 

நித்தமும் சந்தோசம்
அணு தினமும் ஏக்கமும்
இரண்டும் கலந்த கலவை
இந்நாளின் என் வாழ்கை

பெரும் பிரச்சினை ஒன்று
சாதி என்ற பெயரில் இன்று
அதை முறியடிப்பது  எவ்வாறு
சமுகத்தை சிறிது தூர்வாரு

தினம் தினம் அலுவலும்
நித்ததும் நினைவில் அவளும்
சலனமின்றி கால்களும்
சிந்தனை இன்றி நானும்

கவலைகள் பல
சந்தோஷங்கள் பல
கனவுகள் பற்பல
சண்டைகள் அவளுடன் சில

அவளின் கல்வி முடிந்தது
அவள் பணிக்கான தேடல் துவங்கியது
அனைத்துமாய் நான் இருந்தேன்
அவளுக்காக பனி தேடினேன்

கிடைத்தது ஒரு வேலை
அதுவும்  வாரத்தில் ஆறு நாள் வேலை
அவளுக்கு அது பிடிக்கவில்லை
அவளை வருத்த எனக்கு விருப்பமில்லை

ஆகவில்லை ஒரு மதம் கூட
கூறினேன் அவளிடம்  அதை நிறுத்திட
எனக்காகவே அவள் மீண்டும் பணி தேடினாள்
அப்படித்தான் நாங்கள் சந்திக்க இயலும் என்றாள்

============================================ தொடரும்






Friday, 14 September 2012

என் காதல்-11

  செய்து கொடுத்தேன் சத்தியம் ஒன்று
நான் இனி புகைப்பது இல்லை என்று
அது அமலில் ஆனது இன்று
அவள் அனுமதிப்பது என்று?

அவள் நினைவுகளிலே பயணித்தேன்
அனைத்தையும் மறந்தேன்
அவளின் புண் சிரிப்பில் மயங்கினேன்
அவள் இன்றி வாழ்வில்லை என முடிவெடுத்தேன்

நினைவலைகள் எங்கோ சென்றன
நினிவினில் ஏதும் நில்லாமல் இருந்தன
நித்தமும் அவள் எண்ணங்கள் எழுந்தன
நிஜத்தினில் எண்ணங்கள் இருக்க மறந்தன

வாழ்வியல் தத்துவம் புரிந்தது - என்
வாழ்க்கை அவளுக்கென தெரிந்தது
வாழ்நாள் முழுவதும் அவளுக்கு அர்பணித்து
விண்ணுலகில் அவளுடன் பயணித்து

அவள் வீடு சென்றடைந்தாள் என செய்தி வந்தது
அளவில்லா இன்பம் உள்ளத்தில் தோன்றியது
அவளுடன் பேச ஆர்வம் தூண்டியது
அவள் வீட்டில் இருக்கிறாள் என்பது தடையாய்  நின்றது

சேர்ந்தேன் வீட்டிற்கு
சந்தோஷத்தில் தத்தளிப்பதற்கு
சண்டைக்கு இழுப்பதற்கு - இருக்கின்றனர்
சிநேகிதர்கள் என்றைக்கும்

உண்டேன் உணவினை
உடனே தட்டினேன் குருன்செயிதியினை
உறங்க தொடங்கலானேன்
உறக்கத்தில் ஆவலுடன் வாழ ஆரம்பித்தேன்

கனவுலகில் இருவரும் சேர்ந்தோம்
கள்ளங்கபடமின்றி வாழ்ந்தோம்
காதல் மிகுதியாய் பகிர்ந்தோம்
கணவன் மாணவி என வாழ்ந்தோம்

============================= தொடரும்




என் காதல் 10

நெருங்கிவிட்டாள் அவள் என்னை
பகிர்ந்தாள் அன்பினை தன்னை
அன்பிலே அவள் அன்னை
ஆட்கொண்டாள்  முழுதாய் என்னை

பேருந்தில் ஏறினோம்
பெருமூச்சு விட்டோம்
பயண சீட்டு பெற்றோம்
பயணம் தொடங்கினோம்

கோயம்பேடு முதல் கானத்தூர் வரை
காதோடு காதாக சிலாகித்தோம்
கடும் வெயில் என்றதையும் மறந்தோம்
கானத்தூர் சென்றடைந்தோம்

சிங்க கர்ஜனை பார்க்க தயாரானோம்
சிணுங்கள் குலுங்கலுடன் சுற்றி வந்தோம்
சிங்கம் திரியாரங்கினுள் நுழைந்தோம்
சிரிப்பு வெள்ளத்தில் தவழ்ந்தோம்

எங்கள் ஜோடியை பார்த்து பலர்
எடுத்த கண் வாங்காமல் பார்த்தனர்
எவ்வளவு கண் வைக்கமுடியுமோ வைத்தனர்
எங்களுக்கு அது பொருட்டில்லை என்பதை உணராதிருந்தனர்

சூர்யா அனுஷ்க ஜோடி பொறுத்தமா - இல்லை
சூர்யா ஜ்யோதிகா ஜோடி பொறுத்தமா  - இல்லை
எங்க ஜோடி பொறுத்தமா - இவ்வளவு கேள்விகள்
எங்களுக்குள் - இப்படி தான் தொன்றும காதலித்தால்?

கானத்துரிலிருந்து திரும்பினோம்
ஈஞ்சம்பாக்கம் சென்றோம்
சாய் நாதனை தரிசித்தோம்
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம்

மனதுள் எதோ தெரிய நிம்மதி
மங்கை அவள் கண்களில் முழுமதி
மனாளனின் கை கோர்த்த வெகுமதி
மனங்களால் ஒன்று சேர்வோம் நங்கள் என்பது விதி

வாடிக்கை போல உள்ளது
வருத்தமெல்லாம் தீர்ந்தது - மதி
வாகை சூட வந்தது - அவளின்
வருகையில் பூரிப்படைந்தது

மாலை வீடு திரும்ப வேண்டும்
மீண்டும் தற்காலிகமாய் பிரியவேண்டும்
மனதால் ஒன்று பட்டாலும்
மனதில் வேதனை விலகாது போலும்

வழி அனுப்பி வைத்தேன் அவளை
என் மனதில் ஆரம்பித்தது பெரும் ரகளை
இந்த பிரிவு வாட்டி எடுக்குது எங்களை
பரிமாறிக்கொண்டோம் அளவற்ற காதலை

அவள் கெளம்பும் வரை கண்கொட்டாமல் பார்த்தேன்
அவளும் என்னை அவ்வாறே நோக்கினாள்
இனம் புரிய வேதனையில் எங்கள் உள்ளங்கள்
காதலர்களுக்கு இவையெல்லாம் அன்றாட வரும் இன்னல்கள்

வீடு திரும்ப வேண்டும்
பேருந்தில் ஏற வேண்டும்
ஏனோ தெரியா வெற்றிடம்
எனக்கு எங்கே புகலிடம்

அவளிடம் அலைபேசியில் பேசினேன்
அபரிமித ஜக்கிரிதை வேண்டுமென்றேன்
அவளின் விம்மல் கேட்டு அலறினேன்
அவளின் கண்ணீர் துடைக்க எண்ணினேன்

மொக்கையாய் பேசினேன்
மெல்ல சிரிக்க கண்டேன்
மெதுவாய்  எடுத்து சொன்னேன்
மெல்ல நானும் கெளம்பினேன்

நண்பர்களின் காலாய்ப்பு
வந்தது அவர்கள் மேல் வெறுப்பு 
அவள் கண்களின் ஈர்ப்பு
அவள் என்றுமே எனக்கு இனிப்பு 

================================== தொடரும்



Thursday, 13 September 2012

என் காதல்-9

சென்னை வந்தடைந்தேன்
சீராக விமானநிலையம் விட்டு வெளியேறினேன்
சுறுசுறுப்பாக  வாடகை வண்டியை பிடித்தேன்
சந்தோஷமாய் என்னவளிடம் பேசத்தொடங்கினேன்

நாளை  சந்திக்க வேண்டும் என்றேன்
நான் சித்தம் என்றாள்
நகைப்பு  நிறைந்தது மனதில்
நன்றி என்று கூறினேன்

வந்தது அவளுக்கு பெருங்கோபம்
விடாது திட்டிக்கொண்டே இருந்தாள்
விஷயம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் - அதை
விட்டு விட மன்றாடினேன்

காதலில் நன்றிக்கு இடமில்லை
கடுகலவிற்கும் மன்னிப்புக்கும் இடமில்லை
காலம் முழுவதும் புரிதலே
கன நேரமும் இல்லை சந்தேக நெருடலே

வந்து சேர்ந்த நேரம் அதிகாலை
வரம் கொடுத்தாள் என் தேவதை
விமான பயண களைப்பு வருடுதே
வின்மீன்கள் கன் சிமிட்டுதே

உறங்க ஆரம்பித்தேன்
உறக்கம் இன்றி தவித்தேன்
உலக அழகியை காண துடித்தேன்
உருண்டு உருண்டு புரண்டேன்




அதிகாலையிலே கண் விழித்தேன்
அவசரமாய் கெளம்பினேன்
அவளை காணும் ஆவலுடன் இருந்தேன்
ஆவலுடன் கனவுலகில் உலவினேன்

பேருந்து நிலையம் சென்றேன்
பேரழகியின் வருகைக்கு காத்திருந்தேன்
பேசிக்கொண்டே இருந்தேன் - அவள் சொன்னாள்
பேரழகா உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்










 

என் காதல்-8



சொன்ன விதம் பிடிக்கவில்லை
சொல்லியே விட்டாள்  அதனை
சொற்களை  தேடினேன் அவளை
சமதானமக்க - என்ன சொன்னாலும் கோபம்  குறையவில்லை

சொல்லிவிட்டேன் என்ற மகிழ்ச்சியும்
சொன்னது சரிவர இல்லை என  இகழ்ச்சியும்
சூழ்ந்து என்னை வாட்டிய வதைப்பும்
சுருங்கிய என்  மனமும்

தவிப்பு அடங்கிப்போனது
தூக்கம் விலகி சென்றது
தனிமை சூழ்ந்து கொண்டது
தாங்க முடியா வலி ஆட்கொண்டது

என்ன கொடுமை இது
என்னை மட்டும் வாட்டுது
என் விரோதிக்கும் இது நேர கூடாது
என்னவளிடம் இருக்க கூடாது

பணிக்கு சென்றேன்
பிடிப்பிள்ளது இயங்கினேன்
பரவசம் இன்றி சிரித்தேன்
பாரத்துடன் தடுமாறினேன்

குறுஞ்செய்தி பரிமாற்றம்
காதல் அரங்கேற்றம்
கண்களில் பெரும் ஏக்கம்
காண வேண்டும் என அசைகள் ஓராயிரம்

அழைத்தேன் அவளை
அன்பாக சொன்னேன் காதலை
ஏக்கம் தாங்க முடியவில்லை
என்றும் எங்களுக்கு வானமே எல்லை

அவள் ஒப்புக்கொண்டாள் - இம்முறை
அலைக்கழிக்காது என்னை - மறுமுறை
அழைத்தேன் அவளை - பகிர்ந்தேன்
அளவற்ற்ற காதலை

அன்றிரவு என் சென்னை பயணம்
அளவில்லா  மகிழ்ச்சியில் என் மனம்
ஆடி பாடி கொண்டே சென்றேன்
அவளை மகிழ்வித்து கொண்டே வந்தேன்

கனம் யுகமாவது இது தானோ
காதல் என்றாலே இருக்குமோ
காண துடிக்கும் ஏக்கமோ
காத்திருக்க தான் முடியுமோ?

விமான நிலையம் வந்தேன்
விரைவாக  பயண சீட்டு பெற்றேன்
வேகமாய் ஆய்வுகளை முடித்தேன்
விமான நேரத்திற்கு காத்திருந்தேன்

அறிவிப்பு கேட்டேன்
அலறி அடித்து ஓடினேன்
அமர்ந்த பின்னரே  சுவாசித்தேன்
ஆழ்ந்த  சிந்தனையில் மூழ்கினேன்

முழுவதும் அவள் நினைவுகளே
மதியினில் அவளுடன் இருந்த கணங்களே 
மனதினில் பொங்கின அலைகளே
மயக்கத்திலும் தோன்றுகின்றன அவள் கண்களே

அலைபேசியை எடுத்தேன்
அவள் எண்ணை அழைத்தேன்
ஆவலுடன் காத்திருந்தேன்
அவளுடன் சல்லாபித்தேன்

அழகிய மங்கை அறிவித்தாள்
அனைத்து மின்னணு கருவிகளையும் அணைக்க சொன்னாள்
அவளிடம் அதை கூறினேன்
அனைத்து விட்டேன் என் அலைபேசியை

விமானம் இயங்க தொடங்கியது
வியர்த்து கொட்ட ஆரம்பித்தது
வியப்பாய் எனக்கு  இருந்தது  -அதற்கு
விடை தெரியாமல் இருந்தது

பறக்க ஆரம்பித்தோம் விமானத்தில்
பாரம் குடிகொண்டது என் மனதில்
பரந்து காணும் வானில்
பரதேசியாய் நான் என்ற தவிப்பில்

திருமலையை நெருங்கினோம்
திருவேங்கடன் ஆலயத்தினை விண்ணிலிருந்து தரிசித்தோம்
திருப்பொன்னால் அலங்கரித்தை கண்டு வியந்தோம்
திருவருள் பெற்றது போல் உணர்ந்தோம்

மனதில் பெருங்குழப்பம் - என்
மனராணி கண்கள் அழகானதா ? - இல்லை
மஹா விஷ்ணு வேங்கடனின் கோபுரம் அழகானதா?
மடத்தனமோ இது எனக்குள்ளே???

============================================ தொடரும்







Wednesday, 12 September 2012

என் காதல்-7

உள்ளே சென்றபின் அவள்
உணவு உண்ண  வில்லை என்றாள்
உருக்குலைத்தது அவளின் சொல்
உடனே உண்டி சாலையை நோக்கி சென்றது கால்

சந்தோஷமாய் சாப்பிட்டாள் - என்னை
சூரயாடினால் ஓர விழியினால்
சலனமின்றி  நின்றேன்
சகலகலாவல்லவன் ஆனேன்

மூன்றாம் சந்திப்பு இது - இனிய
முற்பகல் காலமானது - புன் சிரிப்பு
முகத்தில் தோன்றியது - எண்ணங்கள் வேகமாய்
முன்னோக்கி சென்றது

காதலிப்பவர்களுக்கு  இருப்பதில்லை பொறுமை
இது தானோ படைத்தவனின்  திறைமை
அவன் அறிவு  சிந்தனையோ அருமை
பாடாமல் இருக்க முடியவில்லை அவன் பெருமை

திரையில் படம் ஓட- எங்கள்
மனங்கள் வின்னுலகில் பறக்க
இருதயங்கள் படபடத்து துடிக்க
இருவரும் தவிப்பினை மறைக்க

இன்றாவது சொல்வேனா அவளிடம்
இருக்குமா அவள் மனத்தில் காதலுக்கு புகலிடம்
இதயத்தின் சொல்லை கேட்கவா
இல்லை இன்னும் காத்திருக்கவா??

விடை தெரியா  கேள்விகள் பல
விடை தேடி அலைந்த நாட்கள் பற்பல
விடை கொடுத்து விடுவாளோ எனக்கு
விம்மி அழுகிறேன் - கேட்கவில்லையா உனக்கு

இருக்கைகலில்  அமர்ந்தோம்
இவ்வுலகினை மறந்தோம்
இன்ப வெள்ளத்தில்  திணறினோம்
இக்கணமே இணைந்து வாழ நினைத்தோம்

நினைத்ததை சொல்லிவிடு
நிம்மதியாய் இருந்து விடு
நித்திரையை திரும்ப பெற்றிடு - மனமே
நிதானத்துடன் எல்லாம் கூறிவிடு

கதைக்க தொடங்கினேன் - அவள்
காதருகில் மெதுவாக
நோக்கினால் என்னை பண்பாக- சிறிது
நோகடித்தல் என்னை அன்பாக

காட்சி ஆரம்பித்தது
கவனம் அதன் மேல் செல்ல மறுத்தது
காதலி அருகில் இருக்க
கவனம் எதன்  மேல் இருக்கும்?

அருகில் அவள் இருக்க
அனைத்து  வார்த்தைகளை  நான் ஆராய
அவள் என்னிடம் பேசிக்கொண்டே செல்ல
அவளிடம் காதலை சொல்ல நான் தடுமாற

ஏன் எனக்கு மட்டும் இக்கொடுமை
நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற அறியாமை
காதலிப்பதை விட சொல்வது  தான்\கடினமோ
கட்டுக்கடங்காத மனதிற்கு போட்டுவிட்டேன் கடிவாளமோ ?

படத்தில் சொல்வது அத்தையும் பொய்யப்பா- அவளை
பார்த்து காதலை சொல்வது கடினப்பா
பார்க்காத பொது சொல்ல தோன்றாதே
பார்த்து பார்த்து வார்த்தைகளை கோர்க்க வேண்டுமே ?

எவ்வளவோ பேசினேன் அவளிடம்
என் மனதில் உள்ளதை சொல்ல தடுமாற்றம்
எண்ணியதை சொல்ல ஆதங்கம்
என்றுமே முடியாமல் போகுமோ என்ற தயக்கமும்

அவளுக்கு என் மேல் காதல் உள்ளது
அதை என் மனம் உணர்ந்தது
அவளுக்கும் அதை சொல்ல தயக்கம்
அண்ணலுக்கும் அவளுக்கும் காதல் மயக்கம்

சொல்கின்ற ஒவ்வோர் சொல்லிலும்
சமுத்திர அலை போல காதல் பொங்கும்
சொல்ல தான் தயக்கம் - அனால்
சொல்லிவிட வேண்டும் என ஏக்கம்

இருதலை காதல் தான்  இது
ஒரு தலை காதல் போன்ற தவ்விபிது
இருவருக்கும் வேண்டும்
இருவருக்கும் வெளிப்படுத்த பயம்!

காட்சி முடிந்தது
கண்களில் ஏக்கம் நிரம்பியது
கண்ணீர் மல்க விடை கொடுத்து
கனமான நெஞ்சங்கள் செல்ல நேர்ந்தது

இருவருக்குள்ளும் ஒரே அலைகள்
அவள் ஏற்பாளா  என நான்
அவன் ஏற்பான என அவள்
அணைக்கட்டு மலை போல் ஆனது

அணையை உடைக்க வேண்டும்
அப்போது தான் வெள்ளம் பாயும்
அன்றிலிருந்து தேடினேன் சந்தர்பம்
அளவில்லா ஏக்கமும் ஆனது சொந்தம்!

மும்பை பயணம் செல்ல வேண்டும்
அலுவலை சீராக முடிக்க வேண்டும் - திரும்பிய உடன்
அவளிடம் காதலை சொல்லியே ஆகா வேண்டும்
அவள் காதலன் என்ற நிம்மதி வேண்டும்!

விமானம் ஏறினேன்
விண்ணில் பறந்தேன்
விம்மி தேம்பி அழுதேன் - ஏனெனில் அவளுக்கு
விடை கொடுத்து வந்தேன்

அலுவல் பனி முடித்தேன்
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்
அவளின் நினைப்பிலே இருந்தேன்
அவளும் அப்படித்தான் என அறிந்து மகிழ்ந்தேன்

அழைத்தேன் அலை பேசியில்
அவள்  எடுக்கவில்லை அம்முனையில்
அழுகை வருகிறது என் கண்ணில்
அழைப்பால அவள் என்னை இம்முனையில்

பல முறை முயற்சித்தேன்
பலனில்லாது பரிதவித்தேன்
பயண களைப்பினால் குலைந்தேன்
பிரச்சினை ஏதானும் வந்ததென பயந்தேன்

மறுபடியும் அழைத்தேன்
மறுமுனையில் அவள் குரல்
மறந்து விட்டேன் அலைபேசியை எடுத்து செல்ல
மன்னித்து விடு என்றாள் !

பேசுகையில் தவிப்பு தெரிந்தது
பேசிக்கொண்டே காதலை சொல்லிவிட்டேன் 
பேயடித்து நின்றாள்
பேசியது உண்மையா என்றாள்

ஆமாம் என்றேன்
ஆமாம் என்றாள் - என்
அரவணைப்பு வேண்டுமென்றாள்- இதற்க்கு
ஆவலுடன் காத்திருந்தேன் என சொன்னாள் !!!!


===================================== தொடரும்






Thursday, 6 September 2012

என் காதல்-6

மறைந்த புன்னகை அரும்பியது
மாற்றம் உடனே நிகழ்ந்தது - என்
மங்கையின் குரல் சக்தி புரிந்தது - என்
மனமே - உன் காதல் அளவு தெரிந்தது

சந்திக்கவேண்டும் என எண்ணினேன்
சந்திக்கலாமா நாளை என்று கேட்டாள் - பொங்கினேன்
சந்தோஷத்தில் நல செய்தி கேட்டதில் நான்
சரி என்ற சொல் மட்டும் கூறலாணேன்

அலுவலுக்கு சென்றேன் - மாய உலகில்
அவளுடன் திரிந்தேன் - நிகழ்காலத்தில்
அறவே இல்லாதிருந்தேன் - எதிர்காலத்தில்
அவளுடன் நித்தம் நித்தம் இருக்க ஆவல்

எந்நேரமும் சந்திப்பின் நினைவே
எதுவும் ஏற்க மறுக்குது மனமே
ஏறெடுத்து பார்க்க முடியவில்லை
எதையும் காண மனமில்லை

இரவெல்லாம் கண் விழித்தோம்
இன்பமயமாய் கதைத்துக்கொண்டிருந்தோம்
இனிமையாய் உலாவினோம் - அவள் குரல் என்னும்
இசை வெள்ளத்தில் மூழ்கினேன்

மறுதினம் காலை வரை பேசினேன்
மறந்த தூக்கத்தை எண்ணாமல் இருந்தேன்
மகிழ்ச்சி போங்க மலர்ந்தேன்
மேகத்தை தொட்டது போல் சிலிர்த்தேன்

எப்பொழுதும் போல அதே சத்யம் வாசல்
எவ்வளவு நேரத்தில் அவள் வருவாளென்ற ஆவல்
எத்தனை முறை சந்தித்தாலும் தீராத தென்றல்
ஏனென யோசிக்க முடியாமல் திணறல்

காத்திருந்தேன் அவள் வருகைக்கு
காதலின் அருமைக்கு!
காதுகள் சிலிர்த்து நின்றன -அவள்
காதருகில் வந்து கூப்பிடுவாள் என

வந்து சேர்ந்தால் அவள்
வந்திறங்கியது என்கண்ணில் மின்னல்
வருடியது முகத்தில் காதல்
வாடியது அவள் முகம் வியர்வையில்!

தங்குமா என் இதயம் இதை கண்டு
துடைத்தேன் கை குட்டையை கொண்டு
துள்ளலுடன் சிலிர்த்தால் என்னை கண்டு
தூண்டிலில் மீன் போல் சிக்கினேன் அவள் விழிகளை கண்டு!

அளவில்லா காதல் இருவரிடமும்
அணைக்கட்டு போல தடுமாற்றமும்
அடைவது எண்டு அவைளை என்ற எண்ணமும்
அதற்கு நானே தடை என்ற ஏமாற்றமும்

உள்ளே சென்றோம்
உள்ளங்கைகளை கோர்த்து நடந்தோம்
உள்ளத்தால் ஒன்று சேர்ந்தோம்
ஊமை போல மௌனத்துடன் இருந்தோம்



............................................................................தொடரும்

Tuesday, 6 March 2012

என் காதல்-5

மாற்றங்கள் வந்ததற்கு நானே காரணம்
மதி முழுதுவம் அவளின் மேல் காதல் ஓவியம்
மனதில் உள்ளதை கூற என்னிடம் தாமதம்
மறந்து போனேன் நான் அனைத்தையும்

அவளிடம் பேசுகையில் -
நாழிகைகள் மனிதுலகல் போல கரைந்தன
நான் என்ற எண்ணங்கள் என்னுள் மறைந்தன
நயாகரா போல காதல் அலைகள் பொங்கின 
நடுவில் யாரேனும் அழைத்தல் கோப கனல்கள் எழுந்தன  

அவள் குரல் கேட்காத நேரம் -
கணங்கள் யுகங்கலாயின
காலனின் பாச கயிறுகள் தெரிந்தன
காரணமின்றி கால்கள் நடந்தன
காதலை மறைக்க முயலாது நாடி துடிப்புகள் திணறின

நாட்கள் நகர -எங்கள் மனங்களின்
நெருக்கம் கூட -பரிதவிப்பு அடங்க
நேசம் நெறைய - காதல் பெருக
இன்ப வெள்ளம் பொங்க - இனிமையாய் எல்லாம் அமைய

காதல் புறாக்கள் பறந்தன
காதலுடன் ஊர் சுற்றி திரிந்தன
தினமும் பார்க்க துடித்தன
எப்பொழுதும் பேசி மகிழ்ந்தன

காதல் கட்டுக்கண்டகாமல் வளர்ந்தது
காதலை சொல்ல மட்டும் முடியாமல் போனது
காலம் விடை சொல்லவும் மறுத்தது
காதல் எங்கள் மனதை வதைத்தது

அவள் தேர்வுகள் நெருங்கின
அவளின் தவ்விபுகள் கூடின - ஒரு பக்கம்
அவளை ஆட்கொண்ட நான் - மறுபக்கம்
அவளின் கடைசி தேர்வுகள் இளங்கலையில்

மனதில் வலி ஒரு பக்கம்
உடலின் வலி மறுபக்கம்
தேர்வுகளுக்கு படிக்கவேண்டிய கட்டாயம் இப்பக்கம்
அவள் என்னத்தான் செய்வாள் அப்பக்கம் !

உதவ முயன்றேன் நான்
அதை கூறினேன் அவளிடம்
மகிழ்ந்தாள் மிகையாக
முத்தமொன்று குடுத்தாள் அன்பளிப்பாக!

அவளுக்கு என் மேல் இருப்பது காதலா?
அவள் குடுத்த முத்தம் அதன் வெளிப்பாடா?
அரும்பும் கேள்விகள் என்னுள்
அதற்கு பதில்கள் தேடவேண்டும் அவள் மனதில்!

தயங்கினேன் நான் அதை கேட்க
தயார்படுத்த வேண்டும் அவள் தேர்வினை எதிர்கொள்ள
தலையாய கடமையாய் நிற்குது என் முன்னே
தடுமாற்றமின்றி முடித்துவிடுவோம் கண்ணே

படித்தாள் அவள் நன்கு
பயமின்றி எழுதினாள் தேர்வு - அவள்
பக்கமே வரவில்லை மன சோர்வு
பற்றிக்கொண்டது உடல் சோர்வு

கல்லூரி வாழ்வில் கடைசி நாள் - நண்பர்களுடன்
கலந்துரையாடலின் தற்காலிக கடைசி நாள்
காத்திருந்தேன் அவளின் அழைப்பிற்கு
கன மனத்துடன் அவள்- அப்பால் தொடர்பு எல்லைக்கு!

பிரியா விடை கொடுத்தாள் நண்பர்களுக்கு
பிரியத்துடன் அழைத்தாள் எனக்கு
பரிதவிப்புடன் சொன்னாள் - "சோர்வு எனக்கு"
பரிதாப நிலையில் எங்கள் மனக்கணக்கு!

நிம்மதியாய் உறக்கத்தில் அவள்
நிம்மதியின்றி தவிப்பில் நான்
நியாயமா இது பிரம்மா தேவா?
நிமிடமாவது நீ இந்த வேதனையை உணர்வாயா?

கன நேரமும் நிம்மதியில்லை - என்றும்
காணாத அன்பு தொல்லை - அவளையும்
குறை சொல்வதற்கில்லை - நெஞ்சமோ எதையும்
கேட்கும் நிலைமையில் இல்லை !

தூக்கமின்றி தவிக்கையில் தோன்றியது ஒரு விதை
நந்தசிவபாலனின் மணிமேகலை உரைநடை கவிதை
எடுத்து வாசிக்க தொடங்கினேன் - மனதில் அரும்பியது
இப்படித்தான் மணிமேகலையும் தவித்தலோ வந்தியதேவனுக்காக??

மணிமேகலையின் காதல் உண்மையோ?
மனத்தவிப்பில் என்னை மிஞ்சியவளோ?
மதி நுட்பத்தில் என்னவளை வெல்வாளோ?
மனத்தால் காதலை பரிமாறுவதில் எங்களை தோற்க்கடிப்பவளோ?

என்ன இது மடத்தனம் ?
எனக்குள் ஏன் இந்த பைத்தியம் ?
என் காதல் ஆகுமோ அழியா சரித்திரம்?
எனக்குள் வருமா நிதானம்?

அலுவலகம் செல்ல நாட்டமில்லை
அலுவலுக்கு செல்லாவிட்டால் சம்பளமில்லை
அலை கடல் போல் என் மனம்
அழைத்தாள் என்னை அலைபேசியில் அக்கணம்!

....................................................................................தொடரும்

Friday, 20 May 2011

என் காதல்-4

ஒருபக்கம் அவள் வலி குறைத்த சந்தோசம்
மறுபக்கம் முழுதாய் அவளை கவனித்துகொல்லாத துக்கம்
என்னை விட்டு போனது தூக்கம்
என்றும் தீராது அவளின் மேல் ஏக்கம்

உணவு இறங்கவில்லை
உடல் உறங்கவில்லை
உள்ளே அவள் நினைவலை
ஊன் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை

அவளிடமிருந்து மறுநாள் செய்தி வந்தது
அதை கேட்டு உள்ளம் இளைப்பாறியது
அவள் கூறியது இனிமையானது
அவளின் வேதனை குறைந்தது

உணவு அப்போதுதான் ருசியாய் தெரிந்தது
உண்ணும் வேகம் கூடியது
ஊரிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது

அடிக்கடி நலம் விசாரித்தேன்
அவளுக்கு என் காதலை சொல்ல முயன்றேன்
அப்போதும் தோல்வியுடன் கைகோர்த்தேன்
அவள் மனதில் இடம் பிடித்தேன்

மாற்றங்கள் பல அவளிடம்
மாறியதற்கு நானே காரணம்
மனதிற்கு இது சந்தோசம்
மனதில் உள்ளவளுக்கு இது பெருங்கஷ்டம்

என் காதல்-3

காலை முதல் என் கண்மணி ஏதும் உண்ணவில்லை
கேட்டதும் என் மணம் பொறுக்கவில்லை
உணவு கூடம் ஏதும் கண்ணில் படவில்லை
சிற்றுண்டி சாலை ஏதும் அரங்கில் இல்லை
 
தின்பண்டகூடம் கண்ணில் பட்டது உடனே
ஏதேனும் வாங்க எண்ணம் தட்டியது
வாங்கினேன் பழரசமும் நொறுக்கு தீனியும்
இது எந்தளவுக்கு என்னவள் பசியை போக்கும் ??
 
உள்ளே சென்று அமர்ந்தோம்
வாங்கிய உணவை உண்டோம்
கதைப்பது துவங்கியது
அது நிற்காமல் சென்றது
 
திரையில் ஓடும் படத்தில் நாட்டமில்லை
தேவதையின் மேலிருந்து பார்வை விலகவில்லை
அவளை கண்ட நொடிமுதல் பேச வரவில்லை
காதலை எவ்வாறு சொல்வேனென்று தெரியவில்லை
 
அவள் கண்களிலும் அதே ஒலி
அங்கேயும் அதே காதல் வலி
அவளுக்கு புரிந்து விட்டது என் மனமொழி
என்று கட்டுவேன் அவள் சங்குகழுத்தில் பொற்தாலி
 
திடீர் மாற்றம் அவள் முகத்தில்
கண்ணீர் மல்கியது அவள் கண்ணில்
குழப்ப அலைகள் அவள் மனதில்
ஏதோ சொல்ல வந்தன உதடுகள்
 
புரிந்தது அவள் வலி எனக்கு
ஆண்டவனுக்கு நன்றி இந்த வாய்ப்பிற்கு
காதோரம் நான் வினவினேன்
கணம் தாமதத்துடன் பதில் பெற்றேன்
 
இயன்றவரை அவளை பார்த்துக்கொண்டேன்
இன்றைக்கு காதலை சொல்வதை தள்ளிவைத்தேன்
வீடு சேரும்வரை அவள் காவலனாக இருக்க எண்ணினேன்
விருப்பத்துடன் சம்மதமும் பெற்றேன்
 
சேர்ந்து பயணித்தோம்
சேர்ந்தே இருக்க தீர்மானித்தோம்
அவள் வேதனையை குறைத்தேன் சிறிது
அன்று முதல் ஆகவில்லை புன்னகை அரிது
 
அவளிடம் வரை ஒன்றாய் சென்றோம்
அளவற்ற வலியுடன் விடை பெற்றோம்
சிறு பிரிவுதான் இதென எண்ணிக்கொண்டோம்
அவள் என்றும் எனக்கு வேண்டும்
 
சொந்த ஊரில் வந்து இறங்கினேன்
சோகத்துடன் வலம் வந்தேன்
சொற்ப வேகத்தில் நடந்து சென்றேன்
சற்பத்தை கண்டும் சறுக்காமல் கடந்தேன்

Thursday, 19 May 2011

என் காதல்-2

உன்னை விட்டு வரவும் மனமில்லை
உன்னுடன் சேர்ந்து இருக்க நேரமுமில்லை 
என் நடையில் உயிர் இல்லை
உன்னை சுற்றியே வருகிரதேன் எண்ண அலை  
 
 வந்து சேர்ந்தேன் என்னிடத்திற்கு
வர துடித்தேன் உன் அருகிற்கு
காத்திருந்தேன் உன் பதிலுக்கு
நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு
 
மனதளவில் உன்னுடன் சேர்ந்துவிட்டேன்
காதலை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன் அழைப்புக்கு ஏங்கி தவித்தேன்
உன் குரலுடன் தின வாழ்வை தொடங்கினேன்
 
வந்தது உன்னிடமிருந்து குறுஞ்செய்தி
இருந்தது அதில் எனக்கோர் பேரதிர்ச்சி
உன் மாமன் மகளின் திருமணம்
நீ செல்ல வேண்டியது அவசியம்
 
இருப்பேனா நான் உன் குரல் கேளாமல்
இருப்பாயா நீ என்னுடன் கதைக்காமல்
எப்படி இருப்போம் நாம் காதலை பகிர்ந்துகொள்ளாமல்
முடியாது செல்வதை தவிர்ப்பது உன்னால்
 
இரு தினங்கள் பல யுகங்கலாயின 
ஈராயிரம் முறை அலைபேசியை கண்கள் நோக்கின 
உன்னுடன் பேச உதடுகள் துடித்தன 
உன் அழைப்புக்கு ஏங்கி உயிர் அணுக்கள் ஏங்கின
 
மூன்றாம் நாளும் இல்லை உன் அழைப்பு
என்றும் இப்படி இருந்ததில்லை என் பிழைப்பு
பெருகிக்கொண்டே செல்கின்றது தவிப்பு
அனைத்துக்கும் நான் தரும் பதில் ஒரு முறைப்பு
 
ஏன் உன் மேல் எனக்கு இவ்வளவு பாசம்
என்றும் என்னுள் இருந்ததில்லை இத்துனை நேசம்
நித்தமும் கோருது என்மனம் உந்தன் காதல் வாசம்
எக்கணம் மீண்டும் வீசும் உந்தன் சுவாசம் 
அலைபேசி ஒலித்தது
படபடப்பு பெருகியது
புதிய என் ஒன்று அதில் தெரிந்தது
மனம் ஏமாற்றத்துடன் கசந்தது
 
என் மனம் அங்குள்ள உன்னை சுற்றி
உன் உள்ளம் எண்ணுது என்னை பற்றி
எப்போது வரும் உந்தன் அழைப்பு
அப்போது அடங்கும் நம் தவிப்பு 
அழைத்தாய் அலைபேசியில் நீ
பகிர்ந்ததாய் அமுதத்தை நீ
அடங்கியது நம் தவிப்பு
மலர்ந்தது உதடுகளில் பூரிப்பு
 
காலையில் காண்பது உன் புகைப்படம்
விழித்ததும் செவியில் தேன்பாயும்
தினமும் இது நிகழும்
என் சுவாசம் உள்ளை வரை தொடரும்
 
மீண்டும் உன்னை காண எண்ணினேன்
மழுப்புதலாய் உன்னிடம் சொன்னேன்
துள்ளி குதித்தாய்
தயங்காமல் சம்மதித்தாய்
 
எங்கு சந்திப்பது நாம்
எழுபது நிமிடங்கள் விவாதித்தோம்
ஒரு முடிவிற்கு வந்தோம்
சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தோம்
 
அதே சத்யம் அரங்கின் வாசல்
மனங்களில் சந்திக்கும் ஆவல்
தூக்கமின்றி சிவந்த கண்கள்
இன்றாவது சொல்வேனா உன்மேலுள்ள காதல்???
 
சந்திக்கும் கணம் நெருங்கியது
உள்ளத்தில் கணம் கூடியது
நொடி நொடி கண்கள் அலைபேசியை கண்டது
உன் பாச சங்கேதங்கள் வந்து சேர்ந்தது
 
கண்டேன் உன்னை நான்
கண்களில் கோடி பிரகாசம் தான்
உன் கரம் பற்றினேன்
உன்னுடனே இருக்க தவித்தேன்
 
அழைத்து சென்றேன்
உன்னை மனதால் அனைத்து கொண்டேன்
காதலை சொல்ல வந்தேன்
சொல்ல மறந்து தவித்தேன் ………………..தொடரும்