Friday 20 May 2011

என் காதல்-3

காலை முதல் என் கண்மணி ஏதும் உண்ணவில்லை
கேட்டதும் என் மணம் பொறுக்கவில்லை
உணவு கூடம் ஏதும் கண்ணில் படவில்லை
சிற்றுண்டி சாலை ஏதும் அரங்கில் இல்லை
 
தின்பண்டகூடம் கண்ணில் பட்டது உடனே
ஏதேனும் வாங்க எண்ணம் தட்டியது
வாங்கினேன் பழரசமும் நொறுக்கு தீனியும்
இது எந்தளவுக்கு என்னவள் பசியை போக்கும் ??
 
உள்ளே சென்று அமர்ந்தோம்
வாங்கிய உணவை உண்டோம்
கதைப்பது துவங்கியது
அது நிற்காமல் சென்றது
 
திரையில் ஓடும் படத்தில் நாட்டமில்லை
தேவதையின் மேலிருந்து பார்வை விலகவில்லை
அவளை கண்ட நொடிமுதல் பேச வரவில்லை
காதலை எவ்வாறு சொல்வேனென்று தெரியவில்லை
 
அவள் கண்களிலும் அதே ஒலி
அங்கேயும் அதே காதல் வலி
அவளுக்கு புரிந்து விட்டது என் மனமொழி
என்று கட்டுவேன் அவள் சங்குகழுத்தில் பொற்தாலி
 
திடீர் மாற்றம் அவள் முகத்தில்
கண்ணீர் மல்கியது அவள் கண்ணில்
குழப்ப அலைகள் அவள் மனதில்
ஏதோ சொல்ல வந்தன உதடுகள்
 
புரிந்தது அவள் வலி எனக்கு
ஆண்டவனுக்கு நன்றி இந்த வாய்ப்பிற்கு
காதோரம் நான் வினவினேன்
கணம் தாமதத்துடன் பதில் பெற்றேன்
 
இயன்றவரை அவளை பார்த்துக்கொண்டேன்
இன்றைக்கு காதலை சொல்வதை தள்ளிவைத்தேன்
வீடு சேரும்வரை அவள் காவலனாக இருக்க எண்ணினேன்
விருப்பத்துடன் சம்மதமும் பெற்றேன்
 
சேர்ந்து பயணித்தோம்
சேர்ந்தே இருக்க தீர்மானித்தோம்
அவள் வேதனையை குறைத்தேன் சிறிது
அன்று முதல் ஆகவில்லை புன்னகை அரிது
 
அவளிடம் வரை ஒன்றாய் சென்றோம்
அளவற்ற வலியுடன் விடை பெற்றோம்
சிறு பிரிவுதான் இதென எண்ணிக்கொண்டோம்
அவள் என்றும் எனக்கு வேண்டும்
 
சொந்த ஊரில் வந்து இறங்கினேன்
சோகத்துடன் வலம் வந்தேன்
சொற்ப வேகத்தில் நடந்து சென்றேன்
சற்பத்தை கண்டும் சறுக்காமல் கடந்தேன்

No comments:

Post a Comment